விவசாயிகள், மக்கள் வேதனை சிவகங்கை, அக்.8- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பணிக்கனேந்தல் அருகே டாஸ் மாக் கடை உள்ளதால் இங்கு உள்ள கண்மாய் நீரால் அல்லாமல் மதுப் பாட்டில்களால் நிறைந்துள்ளதாக விவசாயிகள், மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவும், பணிக்க னேந்தல் கண்மாயை சுத்தம் செய்யவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவ சாயிகள் சங்கம், அப்பகுதி பெண்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி பல மனுக்களை அளித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீர பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்செல்வி, மகேஸ்வரி, அருணா, பிச்சை, ராமச்சந்திரன் ஆகியோர் கூறி னர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘வைகை கரையில் பணிக்கனேந்தல் இருந்தாலும் மழைபெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாயம் நடக்கும். இங்குள்ள மூன்றாம்குளம், இரண்டாம் குளம் ஆகிய கண்மாயின் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் கண்மாய் மதுபான பாட்டில்களால் நிறைந்துள்ளது’’ என கூறினர். மேலும் டாஸ்மாக் கடை இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. எனவே, மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இக்கோரிக்கையை நிறைவேற்றா விட்டால், மானாமதுரையில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.