districts

img

வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பும் மக்களின் ஆதரவும்

கொத்தமங்கலத்தில்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - அமைச்சர்  மெய்யநாதன் வாக்குறுதி

புதுக்கோட்டை, ஏப்.16- திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என்றார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து திங்களன்று மாலை அவர் பேசியதாவது: பல்வேறு இயற்கை பேரிடர்களில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் நேரில் வந்து உதவி செய்யாதவர் பிரதமர் மோடி. கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுப்பதும், அதன் பிறகு தள்ளுபடி செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் பிரதமர், ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுக்க மறுத்துவிட்டார்.  அதேபோல, கேஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி தவித்து வந்த ஏழை-எளிய குடும்பத்தினருக்கும், விவசாயிகளுக்கும் எந்த உதவியையும் செய்யவில்லை.  80 வயதுக்கும் மேற்பட்டோருக்கு அவரவர் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு சீட்டு விநியோகிக்கப்படுகிறது. அதில், பலரும் தபால் வாக்களிக்காமல், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதாக கூறுகிறார்கள். அந்த அளவுக்கு ஜனநாயகத்தை வாக்குச்சாவடி பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.  ஆனால் பாஜகவோ, அதிமுகவோ வெற்றி பெற்றால் வாக்குச்சாவடியே இருக்காது. ஜனநாயகம் கேலிக் கூத்தாகும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், ஆலங்குடி தொகுதியில் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட அமைச்சர் மெய்யநாதன், மிகப் பெரிய ஒன்றியமாக உள்ள திருவரங்குளம் ஒன்றியத்தை இரண்டா கப்பிரித்து கொத்தமங்க லத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா  கடலோர கிராமங்களில் வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை, ஏப்.16 - மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளர் ஆர்.சுதா தரங்கம்பாடி,  பொறையார், குட்டியாண்டியூர், மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை, ஆணைக்கோயில், பிள்ளைபெரு மாநல்லூர், திருமெய்ஞானம், திருக்க டையூர், காழியப்பநல்லூர், கீழ்மாத் தூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், முன்னாள் எம்.எல், ஏக்கள் சித்திக், விஜயபாலன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் அமுர்த.விஜயக்குமார், தரங்கை பேரூர் செயலாளர் முத்துராஜ், திமுக  மாவட்ட மீனவரணி தலைவர் முனை வர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன், ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன், திமுக மாவட்ட விவசாய  தொழிலாளர் அணி துணை அமைப்பா ளர் இரா.செந்தில் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  ஒவ்வொரு கிராமங்களிலும் கோல மிட்டு, மலர்தூவி, ஆரத்தி எடுத்து  பெண்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிபிஎம் தலைவர்கள் பிரச்சாரம்

கும்பகோணம், ஏப்.16 - மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பா ளர் வழக்கறிஞர் சுதா கைச் சின்னத்தில் போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக, சிபிஎம் தலை வர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகு தியில் உள்ள கிராமங்க ளுக்கு சென்று நேரில் வாக்குச் சேக ரித்தனர். இதில் கும்பகோ ணம் ஒன்றியத்திற்குட் பட்ட பாபுராஜபுரம், இன்னம்பூர், திருப் புறம்பியம், தேவனாஞ்சேரி, அசூர், சோழ புரம், கருப்பூர், உள்ளூர், திருநாகேஸ்வரம், சாக் கோட்டை, மருதாநல்லூர், எலுமிச்சங்காபாளையம், தாராசுரம், கும்பேஸ்வரன்கோயில், மேலக் காவேரி, பாலக்கரை ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்குச் சேகரித்தனர். இப்பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன் தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் நாக ராஜன், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.