பெரம்பலூர், ஜூலை 17-
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடை பெற்றது. இதில் பெரம்ப லூர் மாவட்டம் வேப்பந் தட்டை தாலுகா திருவாளந் துறை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களுடன் வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், “எங்கள் கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப பள்ளி நூற்றாண்டு பெருமை காண இருக்கிறது. பள்ளி யின் பெயரில் பட்டாவும் உள்ளது. இந்நிலையில் கிரா மத்திலுள்ள ஊராட்சி ஒன் றிய அலுவலக கட்டிடம் பழு தடைந்ததால், புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கியுள்ளதாக தெரி கிறது.
ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கோதையின் கணவர் சக்திவேல் என்பவர், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அங்கேயே போதிய இடவசதி இருந் தும், அரசாணைக்கு எதிராக எவ்வித அனுமதியும் பெறா மல், பள்ளிக் கல்வித் துறைக்கு சொந்தமான ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரி வித்து பள்ளி தலைமையாசி ரியர் உட்பட பள்ளிக்கல்வித் துறை சார்பில் வேப்பந் தட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஆட்சேபணை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர், அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்ப தற்காக காலை சிற்றுண்டி திட்டம் முதல் பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், அரசுப் பள்ளி யில் இதுபோன்று சட்டத் திற்கு புறம்பாக இடையூறு கள் செய்பவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித் துள்ளனர்.