districts

img

அப்பராசப்புத்தூர் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கிய ஊராட்சி துணைத் தலைவர்

மயிலாடுதுறை,  டிச.20 - அரசுப் பள்ளியில் காலை  உணவு வழங்காததால் குழந்தைகள் ஏமாற்ற மடைந்த நிலையில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து கொ டுத்த சம்பவம் நடந்துள்ளது. மயிலாடுதுறை மாவட் டம் ஆக்கூர் அருகேயுள்ள மாமாகுடி ஊராட்சியில் அப்பராசப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாயன்று தமிழ் நாடு அரசின் காலை உணவு திட்டத்தின்கீழ், வழங்கப்ப டும் காலை உணவு திடீரென வழங்கப்படவில்லை. இத னால் பசியோடு வந்த சின்னஞ் சிறு குழந்தைகள் ஏமாற்ற மடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாமாகுடி ஊராட்சி துணைத் தலைவர் அருகிலுள்ள ஹோட்டலிலிருந்து தனது சொந்த செலவில் உணவு வாங்கித் தந்துள்ள சம்பவம் கடும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. ஆட்சியருக்கு சிபிஎம் கடிதம் இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் செம்பனார்கோ வில் ஒன்றியச் செயலாளர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: அப்பராசப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட  ஏழை, எளிய குடும்பங்களின் குழந்தைகள் கல்வி பயில் கின்றனர். தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன் றான காலை உணவுத் திட்டத் தின்கீழ், இப்பள்ளியில் உள்ள அனைத்து மாண வர்களும்   உணவு உண்டு,  உற்சாகமாக கல்வி பயின்று  வருகின்றனர். இந்நிலையில் செவ்வா யன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு காலை நேர உணவு வழங்கப்பட வில்லை. இதனால் பசி யோடு வந்த சின்னஞ்சிறு  குழந்தைகள் செய்வதறி யாது இருந்துள்ளனர். பின்பு, இத்தகவலை அறிந்த மாமாகுடி ஊராட்சி  துணைத்தலைவர் தனது சொந்த செலவில் ஹோட்டல்  இருந்து உணவு வாங்கி வந்து குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார். அவருக்கு தெரியாமல் இருந்தால், அத்தனை குழந்தைகளும் பசியோடு இருந்திருப்பர். தமிழ்நாடு அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் நடந்த இச்சம்ப வம் குறித்து மாவட்ட ஆட்சி யர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலை உண வுத் திட்டம் முறையாக செயல்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அப்பள்ளி யில் காலை உணவு வழங்கா ததால், ஹோட்டலிலிருந்து உணவு வாங்கி வந்து மாண வர்களுக்கு பரிமாறும் வீடியோ ஒன்று வாட்சப்பில் வைரலாகி வருவது குறிப் பிடத்தக்கது.