districts

ஒரத்தநாடு ஒன்றியக் குழு சார்பில் துண்டுப் பிர சுரம் வழங்கப்பட்டது

தஞ்சாவூர், ஜூலை 28-  

       தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அதிவேக மாக இயங்கும் தனியார் பேருந்து நிர்வாகங்களைக் கண்டித்தும், இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் போக்குவரத்துத் துறையை கண்டித்தும், ஒரத்தநாட்டில் அனைத்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஒரத்தநாடு ஒன்றியக் குழு சார்பில் துண்டுப் பிர சுரம் வழங்கப்பட்டது. வாலிபர் சங்க ஒரத்தநாடு ஒன்றியச்  செயலாளர் பெர்னாட்ஷா, ஒன்றியம், கிளை உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.