districts

img

திருச்சியில் ஓவியக் கண்காட்சி

திருச்சிராப்பள்ளி, ஆக.26 -

      திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் 13 ஆம் ஆண்டு ஓவிய  கண்காட்சி ‘தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும் வாழ்ந்த  ஆளுமைகளும்’ என்ற தலைப்பில் சனிக்கிழமை துவங்கி 3  நாட்கள் நடைபெறுகிறது. இதில் 38 மாணவர்களின் ஓவி யங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

     கண்காட்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திறந்து வைத்து ஓவியர் மார்க் ரத்தினராஜ் ஓவியங்கள் குறித்து  சிறப்புரையாற்றினார். தூரிகை ஓவியத்தில் திருச்சியில்  வாழ்ந்த ஆளுமைகள் மற்றும் திருச்சி மாவட்டத்தின்  வரலாறு பற்றிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

     டிசைன் பள்ளி தாளாளர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம்  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். கவிஞர் நந்த லாலா, திருச்சி மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பொற்கொடி, யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.