திருவாரூர், ஆக.22 -
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை உரையாற்றினார். திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள பி.சீனிவாசராவ் மணிமண்டபத்தில், பி.சீனிவாச ராவ் முழு உருவச் சிலை அமைப்பது. அவரது நினைவகத்திற்கு செல்வ தற்காக சாலை அமைப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்த சாமி, மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் எம்.கலைமணி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.