அறந்தாங்கி, ஜுலை 16 -
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப்பின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
விழாவில் ரோட்டரி மாவட்ட முதல் பெண் ஆநனர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கிளப்பின் புதிய தலைவராக முருகேசன், செயலாளராக சுப்பு, பொருளாளராக வெங்கட் குமார் உள்ளிட்டோர் பணியேற்றனர். ரோட்டரி மாவட்ட பயிற்றுநர் கான் அப்துல் கபார்கான், மாவட்டச் செயலாளர் பீர்சேக், இணைச் செயலா ளர் தங்கதுரை, துணை ஆளுநர் பழனிவேல் உள்ளிட்டோர் பேசினர்.
பின்பு, அறந்தாங்கி காவல்நிலையத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், சிறந்த சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அறம் சுகாதார வளாகம், பயணியர் நிழற்குடை ஆகியவற்றை ரோட்டரி ஆளுநர் ஆனந்தஜோதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.