கரூர், டிச.22 - சிஐடியு கரூர் மாவட்டம் மற்றும் சகோதர சங்கங்கள் சார்பில் திரு நெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சிஐடியு சங்கத் துடன் இணைக்கப்பட்ட தொழிற் சங்கங்கள் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கம், கரூர் ஒன்றிய கட்சி உறுப்பினர்கள் இணைந்து ரூ.60 ஆயிரம் மதிப் பிலான போர்வைகளை திரு நெல்வேலி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இதற்கான பணிகளில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகளுடன், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கோபி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சாந்தி உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். தள்ளுவண்டி, தரைக்கடை சாலையோர வியாபாரிகள் சங்கத் தின் கரூர் மாவட்டக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரக் குழு இணைந்து, ரூ.1.50 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நேரடி யாக மக்களுக்கு வழங்க உள்ளன. இதற்காக, கரூர் மாமன்ற உறுப்பி னர் எம்.தண்டபாணி தலைமை யில் 10 பேர் கொண்ட குழு தூத்துக் குடி மாவட்டத்திற்கு வெள்ளி யன்று சென்றுள்ளது. நிவாரணப் பொருட்கள் வாக னத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு கொடியசைத்து துவக்கி வைத்தார். சிஐடியு நன்றி கடும் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு நிவார ணப் பொருட்கள் அனுப்பி வைக்க முன்னின்று உதவிய தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், நிதி வழங்கிய பொதுமக்களுக்கும் சிஐடியு கரூர் மாவட்ட குழு சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்வதாக சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், மாவட்டச் செயலாளர் சி. முருகேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.