districts

கொன்னையூர் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

பொன்னமராவதி, மார்ச் 27 - பொன்னமராவதி ஒன்றி யம் கொப்பனாபட்டி ஊராட்சி கொன்னையூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் செல்போன் டவர் அமைக்கும் பணி யினை தடுத்து நிறுத்த கோரி  வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷிடம் விவசாயத் தொழிலாளர்கள் சங்க (சிபிஐ) பொறுப்பாளர் ஆர்.பிரதாப் சிங் கோரிக்கை மனு  அளித்தார். அதில், பொதுமக்க ளுக்கு பலவித நோய்களை ஏற்படுத்தும் தனியார் நிறுவ னத்தின் அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன் டவர் அமைக்கும் பணியினை உடன டியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள் ளார்.  இது தொடர்பாக கொப்ப னாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா மகேஸ்வ ரன் கூறுகையில், கொப்பனா பட்டி ஊராட்சி கொன்னை யூர் கிராமத்தில் உள்ள சந்தைப்பேட்டையில் தனி யார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமை க்கும் பணியினை தடுத்து நிறுத்திட வேண்டும் என  ஊராட்சி சார்பிலும் வட்டார  வளர்ச்சி அலுவலரிடமும் கோரிக்கை வைத்துள் ளோம். அவரும் உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளார் என்றார். டவர் அமைக்கும் பணி  நடைபெறும் இடமான சந்தைப்பகுதி கொன்னைப் பட்டி ஊராட்சியை சேர்ந்தது என்பதும், கொன்னையூர் கிராமத்தை சேர்ந்த சந்தை  உள்ளிட்ட சில பகுதிகளை கொப்பனாபட்டி ஊராட்சியு டன் மீண்டும் இணைக்க வேண்டும் என்பதும் இவ்வூ ராட்சி மக்களின் கோரிக்கை யாக உள்ளது குறிப்பிடத் தக்கது.