districts

img

வாலிபர் சங்கம் தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டை, மே 9 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  புதுக்கோட்டை நகரக் குழு சார்பாக புதுக் கோட்டை சின்னப்பா பூங்காவில் வியாழக் கிழமை தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர்,  பழங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கு சங்கத்தின் நகரக் குழு உறுப்பினர் உதயநிதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. நாகராஜன், நகரச் செயலாளர் ஆர்.சோலை யப்பன், வாலிபர் சங்க நகரத் தலைவர் இதயம் முரளி, செயலாளர் தீபக், பொரு ளாளர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.