தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், ஆதிமுத்து சரோஜா திரையரங்கம் அருகில், ஷாம் பேட்மிண்டன் அகாடமி என்ற இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்துப் பேசினார்.