கும்பகோணம், பிப்.22- தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூர் ஒன்றியம் பெரப்படி கிராமத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி யின் கீழ் பெரப்படி ஊராட்சி யில் பொது சுகாதார கழிப் பறை கட்டப்பட்டு இரண்டு வருடங்களாக திறக்கப்படா மல் இருந்தது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி போராட் டங்கள் நடத்தப்பட்டு, சம் பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் பிப்ரவரி 21 அன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தீக்கதிர் நாளிதழிலும் செய்தி வெளி யிடப்பட்டது இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமை யில் பொது சுகாதார கழி வறையை திறந்து வைத்த னர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.