districts

img

பணிகள் முடியாத நிலையில் ஊட்டுவாழ்மடம் ரயில்வே சுரங்கப் பாதை திறப்பு

நாகர்கோவில், பிப்.27- நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம் ரயில்வே சுரங்க பாதை பணிகள் 70 சதவீதம் மட்டுமே முடிவடைந்ததுள்ள தருவாயில் சுரங்க பாதையை திங்களன்று பிரதமர் மோடி  திறந்து வைத்துள்ளார். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலை யம் வருவதற்கு முன்பே ரயில் நிலை யத்தின் பின்புறம் அமைந்துள்ள பகுதி யில் உள்ள ரயில்வே கேட்டில் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள்  கோரிக்கை வைத்து வந்தனர். அதன் பலனாக  ரூ.4.5 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறு மாதங்களில் பணி நிறைவ டைந்தது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தனர். தற்போது மேற்கு பகுதியில் கம்பி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் காணொலி காட்சி மூலம் சுரங்கபாதையை  பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.  இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில்,  சுரங்கபாதை அமைப்பதற்காக முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சுரங்கபாதையின் அகலம், நீளம் கூட்டப்பட்டதால், முதலில் ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை. இதனை தொடர்ந்து மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இன்னும் 3 மாதத் திற்குள் பணிகள் முழுவதும் நிறைவ டைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார். இன்னும் பணிமுடியாத நிலையில்  திறப்பு விழா நடத்தப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. ராமர் கோயில் அரைகுறையாக திறக்கப்பட்டதுபோல் ரயில்வே சுரங்கப்பாதையும் திறக்கப்பட்டுள்ளதாக சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.  அடிக்கல் நடுதலா?  திறப்பு விழாவா? பணி முடியாமல் விழா நடத்தியதை  பொதுமக்கள் விமர்சித்து வரும் நிலையில் இரண்டாம் கட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜகவினர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டு விட்டதாக கொண்டாடி வருகின்றனர்.