கரூர், மார்ச் 11 - கரூர் தெற்கு காந்தி கிராமம் பூங்கா சாலை யில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய உழவர் சந்தையை திங்களன்று கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா ஆகியோர் திறந்து வைத்தனர். கரூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கட்டுப் பாட்டில் 5 உழவர் சந்தைகள் கரூர், குளித் தலை, வேலாயுதம்பாளையம், பள்ளப்பட்டி மற்றும் வெங்கமேடு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சந்தைகளின் மூலம் தினசரி சராசரியாக 46 மெட்ரிக் டன் காய்கறி கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினசரி சரா சரியாக 250 விவசாயிகள் மற்றும் 5,000- க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் பயன்பெறு கின்றனர். இந்நிலையில் தெற்கு காந்திகிராமம் பகுதி யில் திங்கட்கிழமை புதிய உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் விவ சாயிகளின் பயன்பாட்டிற்காக 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இலவச மின்னணு எடை தராசு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இச்சந்தையின் மூலம் கரூர் தாந்தோணி மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டார விவசாயி கள் பெருமளவில் பயன்பெறுவர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வேளாண்மை இணை இயக்கு நர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.