மயிலாடுதுறை/திருவாரூர், ஜன.5 - கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் நகராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வெள்ளி யன்று திறந்து வைத்தார். கிராமப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களி டையே படிக்கும் ஆர்வத்தை உரு வாக்கும் வகையிலும், பொருளா தார ரீதியாக பின் தங்கியுள்ள மாண வர்களுக்கும் இந்த மையம் ஒரு சிறந்த அறிவு கூர்நோக்கு மையமாக திகழும் என்ற அடிப்படையில் அமைக் கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று களை நட்டு வைத்தனர். மயிலாடுதுறையில் தருமபுரம் சாலையில் 383.22 ச.மீ பரப்பள வில் கட்டப்பட்டுள்ள இம்மையத்தில், 2322 புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. 11 கணினியும் அதற்கான இணையதள வசதி, அனைவரும் அமர்ந்து படிக்கும் வண்ணம் மேஜை, நாற்காலி வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தீ தடுப்பு சாதனக் கருவி கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திர மும் உள்ளன. நூலகத்திற்கு மாற்றுத் திறனாளிகள் வருவதற்கு சாய்வுதள மும், சிறார்களுக்கு தனி இருக்கை வசதியும், போட்டி தேர்வர்களுக்கு பயிற்சியுடன் கூடிய பயிலரங்கம் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி வைத்தார். திருவா ரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். 4500 சதுர அடி பரப்பளவிலான இந்நூலகம் மற்றும் அறிவுசார் மையம் இரண்டு தளங்களை கொண் டுள்ளது. நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் முன் வரவேற்பு அறை, படிப்பகம், குழந்தைகள் படிப்பகம் கொண்டுள்ளது. கழிப்பிட வசதி, இயற்கை தோட்டம், சிசிடிவி கேமரா, ஆண்-பெண் இருபாலருக்கும் தனித் தனி வசதியுடன்கூடிய நூலகம் மற்றும் பார்க்கிங் வசதி உள்ளது. அரியலூர் அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, சட்டப் பேரவை உறுப்பி னர் கு.சின்னப்பா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவா ணன், துணைத் தலைவர் கலிய மூர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.