திருவாரூர்,டிச.15- திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், கொரடாச்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திறந்து வைத்தா.. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், கொரடாச்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம் 64.30 ச.மீ பரப்பளவில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் தேவேந்திரன்,ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கொரடாச்சேரி பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி, பேரூராட்சி துணைத்தலைவர் தளபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.