districts

img

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு

அறந்தாங்கி, செப்.2 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல் லூரியில்  மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை,  அமைப்பியல் துறை, மெக் கானிக்கல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.  இங்கு சுமார் 750 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரியில் படித்த 1997 முதல் 2020 வரையிலான முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு, கல்லூரி யின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை  வகுப்பறை, நவீன வசதி யுடன்கூடிய திறன்மிகு வகுப் பறைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா விற்கு கல்லூரி முதல்வர்  ச.குமார் தலைமை வகித் தார். விரிவுரையாளர் கே.பி.செந்தில் வரவேற்றார். துறைத்தலைவர் ஜெயக் குமார் துவக்கி வைத்து பேசி னார். பச்சலூர் அரசு பள்ளி  தலைமையாசிரியர் ஜோதி மணி, ஊர்வணி ஊராட்சி தலைவர் சந்திர மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  தனியார் கல்லூரி களுக்கு நிகராக, அரசு பல வகை கல்லூரியின் மின்ன ணுவியல் துறையின் இரண்டு வகுப்பறை, ஏற்க னவே அமைப்பியல் துறை யின் இரண்டு வகுப்பறை களும் ஆர்.ஓ வாட்டர், ஏசி, இன்வெர்டர் வசதிகளுடன் நவீன ஸ்மார்ட் வகுப்பறை யாக மேம்படுத்த ப்பட்டிருக் கிறது. தற்போது முன்னாள் மாணவர்களின் பங்களிப் போடு அனைத்து வகுப்பறை களும் புதுப்பொலிவு பெற்று  வருகின்றன.