districts

img

ஒட்டங்காட்டில் மீன் மார்க்கெட், அங்காடி திறப்பு

தஞ்சாவூர், ஜன.12-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே  ஒட்டங்காடு ஊராட்சியில், மீன் மார்க்கெட், அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.  ஒட்டங்காட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் நவீன மீன் மார்க்கெட் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அதே போல், மதன்பட்டவூரில் ரூ.12.31 லட்சம் மதிப்பீட்டில் அங்காடி கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இதனை பேராவூரணி சட்டமன்ற  உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து திறந்து வைத்தார். ஒட்டங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ராசாக்கண்ணு முன்னிலை வகித்தார்.  பொங்கல் பரிசு தொடர்ந்து, ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள இரு அங்காடிகளில் பொதுமக்க ளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை சட்ட மன்ற உறுப்பினர் வழங்கி, பணிகளை ஆய்வு  செய்தார்.