நாகப்பட்டினம், பிப்.6 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர் கள் கருகி வரும் வேளையில், காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்க ளில் போதிய தண்ணீர் இல்லா மல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. குறிப்பாக நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிரிடப்பட்டுள்ள நிலையில், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகும் நிலை யில் உள்ளன. எனவே உடனடி யாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர், சாட்டியக்குடி, கரியாப்பட்டினம், கீழையூர், பாப்பாகோவில் உள்ளிட்ட இடங்க ளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூரில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.மாரிமுத்து தலைமையில் மறி யல் நடைபெற்றது. இதில் கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சம்பா, தாளடி பயிரை காப் பாற்ற கூடுதலாக 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஓடம்போக்கி, கடுவையாறு, தேவநதி ஆறு களில் பாசனம் பெறும் நிலங்களுக்கு கூடுதலாக தண்ணீர் விட வேண் டும். பாதிக்கப்பட்ட குறுவை பயி ருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் நீர் வளத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன. இதைத் தொ டர்ந்து சாலை மறியல் கைவிடப் பட்டது. கீழையூர் கடைத்தெருவில் நடைபெற்ற சாலை மறியல் போ ராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். கீழையூர் மேற்கு ஒன்றியச் செய லாளர் டி.வெங்கட்ராமன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகை ஒன்றியம் பாப்பாகோ வில் ஊராட்சியில் நடைபெற்ற போராட்டத்தில் நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், நாகை நகரச் செயலாளர் க. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேதாரய் யம் வட்டம் கரியாப்பட்டினம் கடைத்தெருவில் நடைபெற்ற மறியலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு தலைமை வகித்தார். வேதை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ. வெற்றியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சாட்டியகுடியில் நடை பெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என். என்.அம்பிகாபதி தலைமை வகித் தார். கீழ்வேளூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.முத்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடி கடைத்தெருவில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டீ.லதா தலைமை வகித்தார். தலைஞா யிறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.