districts

மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் வன்கொடுமை வழக்குகளை ரத்து செய்யக் கூடாது!

தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் அறிவிப்பு

மதுரை, டிச.6- மதுரை மாவட்டம் பெருங்குடி யில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் மற்றும் அச்சம்பத்து பகு தியில் தாழ்த்தப்பட்ட சமூக இளை ஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  ஆகியவை தொடர்பாக விசாரணை  நடத்த, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கான இயக்குநர் முனைவர் ஆர்.ரவி வர்மன் திங்கள்கிழமை மது ரைக்கு வருகை தந்தார்.   பெருங்குடியில் நடைபெற்ற தாக்குதலில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனை சந்தித்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்ட றிந்தார். இதைத்தொடர்ந்து பெருங்  குடிக்கு சென்று அங்குள்ளவர்களி டம் தாக்குதல் தொடர்பாக கேட்ட றிந்தார்.  பின்னர் அச்சம்பத்து பகுதிக்குச்  சென்று அங்கு கொலை செய்யப்  பட்ட இளைஞரின் குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினார். இதை யடுத்து ஒத்தக்கடை பகுதியில் கோவில் திருவிழாவின்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நட வடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, மூன்று சம்பவங்கள் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து கேட்ட றிந்தார்.  பின்னர் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ஆர்.ரவி வர்மன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தாழ்த்தப்  பட்டோர் மீதான தாக்குதல் சம்ப வங்கள் பரவலாக நடந்து வரு கின்றன. மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது  நடத்தப்பட்ட தாக்குதல், இளை ஞர் கொலை ஆகியவை குறித்து  நேரில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் பெருங்குடியில் நடைபெற்ற தாக்குதலில் காயம டைந்த சிறுவன் மற்றும் தாயாரை அரசு மருத்துவமனையில் சந்தித்து  தாக்குதல் குறித்து கேட்டறியப் பட்டது.  மேலும் காயமைடந்த சிறு வனுக்கு ரூ.62 ஆயிரம் மட்டுமே நிவாரணத் தொகையாக வழங் கப்பட்டுள்ளது. உடனடியாக ரூ. 1.25 லட்சமும், வழக்கில் குற்றப்  பத்திரிக்கை தாக்கல் செய்த வுடன் ரூ.1.25 லட்சமும் வழங்க  வேண்டும் என்று வருவாய்த்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. சிறுவனின் தாய் ஆதரவற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு வேலை வழங்கவும் ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெருங்குடியில் தாக்குதல் நடை பெற்ற இடத்துக்கும் சென்று  அங்குள்ள பாதிக்கப்பட்டவர்களி டமும் கேட்டறியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தரப்பில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதையடுத்து அச் சம்பத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினேன்.  இளைஞரின் சடலம் இதுவரை வாங்கப்படவில்லை. இழப்பீடு தொகையை உயர்த்தி தர வேண்  டும் என்று கோரிக்கை விடுத்த னர். இளைஞர் கொலை வழக்கில்  உடனடியாக ரூ.6 லட்சமும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் ரூ.6 லட்சமும் வழங்கப்படும்.

மேலும் அரசு உத வித்தொகையாக மாதம் ரூ. 13,500, குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை, வீட்டுமனை பட்டா  மற்றும் வீடு ஆகியவை வழங்கப் படும் என்று குடும்பத்தினரிடம் எடுத்துக்கூறப்பட்டு சடலத்தை வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. குடும்பத்தினரும் இதை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஒத்தக்கடை அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற மோதலில் பாதிக் கப்பட்டவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம்பத்து கொலை வழக்கில் தொடர்புடைய மூவரில் இருவர்  மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள தாகவும், மேலும் ஒருவர் கைது  செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யை மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை அதிகாரியை மாற்றுவதாக காவல்  கண்காணிப்பாளர் உறுதி அளித்  துள்ளார். மதுரை மாவட்டம் மட்டு மின்றி பல்வேறு மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அளிக்கும் புகாரின்பேரில் பதிவு  செய்யப்படும் வன்கொடுமை வழக்குகள், மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டத்தில் மிஸ்டேக் ஆப் பேக்ட் என்ற அடிப்படையில் ரத்து செய்யப்படுகின்றன. இனி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் வன்கொடுமை வழக்குகளை ரத்து செய்யக்கூடாது. வழக்குகளை ரத்து செய்யும் அதிகாரம் நீதி மன்றத்துக்கு மட்டுமே உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.