அரியலூர், ஆக.14-
நூறு நாள் வேலையின் போது பெண் தொழிலாளி வாசுகி மயக்க விழுந்து உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் கலிய மூர்த்தி மனைவி வாசுகி (53). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மக ளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் வாசுகி கோடங்குடி கிராமத்தில் ஒன்றிய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். மேலக்காடு பாதையில் பணி நடைபெற்று வந்தது. அதில் வேலை செய்து கொண்டிருந்த போது வாசுகி, திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் 108 ஆம்பு லன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அறிந்த தா.பழூர் போலீசார் வாசுகி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.