districts

img

மருதுபாண்டியர் கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

தஞ்சாவூர், அக்.7 -  தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக, காலனித்துவம் பின் நவீன காலனித்துவத்தின் நினைவுகள் என்ற தலைப்பில், தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்து பேசினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் மற்றும் புலத்தலைவர் ஆராய்ச்சி கோ.அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர் எஸ்.கார்த்திக்குமார், பெங்களூரு கிருஸ்து ஜெயந்தி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் எல்.சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, ‘காலனித்துவத்தின் வரலாறும் அதன் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.  இவ்விழாவில் வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து, 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.