districts

விவசாயிகள் சங்க செயலாளர் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 26-

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை வட்டத்தில் உள்ள லாலாபேட்டை ஊராட்சியை சேர்ந்த மக்கள் தங்கள் ஊராட்சிக் கான எல்லையை வரையறை செய்ய வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.  

     இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்.சி.மணி பங்கேற்றுள்ளார். மேலும் தகவல்  அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி முகந்தராயபுரம் ஊராட்சியின் ஆவணங் களைப் பார்வையிட்டுள்ளார்.  

    இந்தநிலையில் முகந்தராயபுரம் ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் சுரேஷ்  தலைமையிலான கும்பல் மணியை சரமாரி யாகத் தாக்கியுள்ளனர். அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மணி  தற்போது சிகிச்சை  பெற்று வருகிறார்.  

   கிராம மக்களின் நியாயமான கோரிக்கை களுக்காக போராடிய தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்கு தலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சுரேஷ், தாக்குதலுக்குத் தூண்டிய ஊராட்சிமன்ற தலைவர் ஏ.கே.முருகன் மற்றும் தாக்குதலில்  ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், துணைத்தலைவர் சேகர், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆணைமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்ச நல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மனோ கரன், செல்லபெருமாள், பாலகிருஷ்ணன், வேலு, முத்துசாமி உள்பட பலர் பங்கேற்ற னர்.