புதுக்கோட்டை, மே 22 -
முன்னாள் அமைச்சரும் விராலி மலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரு மான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலி மலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் இவர் அதிமுக அமைச்சரவையில் 8 ஆண்டு காலமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஊழல்கள், முறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் அமைச்சராக இருந்தபோது, இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சம்பந்தமான பல்வேறு இடங்களில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டு வாடா மற்றும் குட்கா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத் துறை யினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சோதனை செய்தனர்.
அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், 2021 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 2016 முதல் 2021 வரை வருமானத்தைவிட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில், அசையும்-அசையா சொத்துகள் என பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்த தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றுகள், 19 ஹார்ட்டிஸ்க் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலை யில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை தாலுகா மஞ்சக்கரனை கிராமத் தில் உள்ள வேல்ஸ் என்ற தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதி முறைகளுக்கு முரணாக-முறைகேடாக தகுதி சான்றிதழை 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வழங்கி உள்ளார்.
இது சம்பந்தமாக கிடைக்கப் பெற்ற ஆவ ணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தமிழ்நாடு முழுவதும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதியப் பட்ட வழக்கில், 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி னர்.
இதில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வருமானத்தை விட அதிகமாக 53 சதவீதம், குறிப்பாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை இவரது பெயரிலும் இவரது மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன், காவல் ஆய்வாளர் ஜவகர், உதவி ஆய்வா ளர் பீட்டர் ஆகியோர் புதுக்கோட்டை நீதித் துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜ ராகி, நீதிபதி ஜெயந்தி முன்பு 216 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள் ளனர்.
மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையில், சென்னை டி.நகரில் 14 கோடி ரூபாய் மதிப்பில் வீடு மற்றும் அசையும் சொத்து களான 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள், தொழிற்சாலைகள் என வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்துள் ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகை திங்களன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் முன்னாள் அமைச் சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி நீதி மன்றத்தில் ஆஜராக செய்து, அதன்பிறகு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கு அடுத்த கட்டமாக திரு வள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக சான்றுகள் வழங்கிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.