தஞ்சாவூர், பிப்.9- கழுமங்குடா பகுதியில் பொதுமக்க ளுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதைக் கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெருந்திரள் நுழைவுப் போராட்டம் நடத்தப் படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியச் செயலா ளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஆர்.மனோகரன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, கிளைச் செயலாளர் அகிலன், பி.பெரியண்ணன், நாகேந்திரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை ஊராட்சிக் குட்பட்ட 4 ஆவது வார்டு கழுமங்குடா புதுத் தெரு பகுதியில், சாக்கடை கழிவுநீர் வாய்க்காலுக்குள் குடிநீர்க் குழாய் புதைக் கப்பட்டுள்ளதால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இத னால் அடிக்கடி காய்ச்சல், பேதி, காலரா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இந்த குடிநீர்க் குழாயை சாக்கடை கழிவுநீரில் இருந்து அப்புறப்படுத்தி, பாது காப்பான முறையில் அமைத்து, சுகாதார மான குடிநீர் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 13 ஆம் தேதி மரக்காவலசை ஊராட்சி மன்ற அலுவல கத்தில் இப்பகுதி பெண்கள், குழந்தைகள், பொதுமக்களுடன் பெருந்திரள் நுழைவுப் போராட்டம் நடத்தப்படும்” என தீர்மானிக்கப் பட்டுள்ளது.