districts

கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்

பெரம்பலூர், ஆக.27 -

        திருச்சி மாவட்டம் தாத்தையங் கார்பேட்டை அருகே பில்லாத்துறை கிரா மத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் - மகேஸ்வரி  மகள் மங்கையர்க்கரசி (32). எம்.ஏ., பி.எட் பட்டதாரியான இவருக்கும் பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் பெருமாள்-கமலா தம்பதியரின் மகன் வினோத் (சிவில் என்ஜினி யர்) (38) என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  

     திருமணத்தின் போது பெண் வீட்டார் 13  பவுன் நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பைக் வாங்க ஒரு லட்சம்  சீதனமாக கொடுத்துள்ளனர். சில மாதங்களே  குடும்பம் நடத்தி வந்த நிலையில், கணவர்  வினோத், தாய் கமலா, தந்தை பெருமாள்,  வினோத்தின் சகோதரி செல்வி, அவரது கண வர் ராஜேஷ் ஆகியோர் மங்கையர்க்கரசி யிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் வீட்டை விட்டு துரத்தியதாகவும் மங்கை யர்க்கரசி தெரிவித்துள்ளார்.  

    மீண்டும் சேர்ந்து வாழ கணவரை அழைத்தபோது, அவர் வர மறுத்து விட்டதாகவும் வற்புறுத்தலின் பேரில் தனி யாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து விட்டு, கணவர் ரோஸ் நகரில் உள்ள அவரது  சகோதரி செல்வி வீட்டில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.  

     தனியாக வசித்து வந்த மங்கையர்க்கரசி மனஉளைச்சலுக்கு ஆளாகி சனிக்கிழமை காலை ரோஸ் நகரில் உள்ள கணவர் வசிக்கும் அவரது சகோதரி வீட்டின் முன்பு கணவரை சேர்ந்து வாழ அழைத்துள்ளார். அவர்கள் மறுத்ததால் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவர்  தரப்பைச் சேர்ந்தவர்கள், மங்கையர்க்கர சியை கல்லாலும் செருப்பாலும் தாக்கி யுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.