நாகப்பட்டினம், ஏப்.27-
புதிய பென்ஷன் திட் டத்தை ரத்து செய்து பழைய பென்சனை வழங்க வேண் டும், ஒன்றிய அரசு அறி வித்த நான்கு சதவீதம் அக விலைப்படியை வழங்க வேண்டும், மாணவர் களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழு வதும் தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதனொரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அ.அர்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை தலைமை வகித்தார். சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆ.தி.அன்பழகன், மாவட் டப் பொருளாளர் அந்துடன் சேரல், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துராஜா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்டத் தலை வர் என்.தம்பிதுரை தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செ.பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் எஸ். செங்குட்டுவன் உள் ளிட்டோர் கலந்துகொண்ட னர்.
கொரடாச்சேரியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னி லம், வலங்கைமான், குட வாசல், நீடாமங்கலம், மன் னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட 19-இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
கும்பகோணம்
கும்பகோணத்தில் உள்ள 9 அரசு அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலை வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். வட்டச் செயலா ளர் இரமேஷ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சே.பிரபாகரன், மாவட்ட துணைத்தலைவர் கவிதா உள்ளிட்ட 400 பெண்கள் உட்பட 750 ஊழியர்கள் பங் கேற்றனர்.