திருச்சிராப்பள்ளி, ஆக.7-
ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு ரூ. 11,050 வழங்க வேண்டுமென வலி யுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசாணை எண்.36-ன் அடிப்ப டையில் கிராம ஊராட்சியில் பணி புரியும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.11,050 மாத ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய் மைப் பணியாளர்களுக்கு ரூ.10,036 மாத ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதி யம் ரூ.10,000 ஊராட்சிகள் மூலம் நேரடியாக வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஓஎச்டி ஆப ரேட்டர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திங்களன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட துணை தலை வர் ராமசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் அழ கர்சாமி, மாநிலச் செயலாளர் பன் னீர்செல்வம் ஆகியோர் பேசினர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை மாவட்டப் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி ஊழி யர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.அன்பழகன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.தங்கமணி, ஏ.சிவனருட் செல்வம் மற்றும் தொழிற்சங்க கூட்ட மைப்பினர் உரையாற்றினர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.கோவிந்த ராஜ் தலைமை வகித்தார். கோரிக் கையை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தலை வர் எம்கே.என்.அனிபா, பொருளா ளர் இரா.மாலதி ஆகியோர் கண் டன உரையாற்றினர். சிஐடியு மாநி லக் குழு உறுப்பினர் ஏ.பிரேமா, அமைப்பின் மாநில ஒருங்கி ணைப்புக் குழு தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.