புதுக்கோட்டை, பிப்.22- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கில் வசித்து வந்த குருவிக்கார இன மக்கள் வசித்த நரிக்குறவர் காலனியை ‘அறிவொளி நகர்’ என பெயர் மாற்றி அப்போதைய ஆட்சியர் ஷீலா ராணி சங்கத் அங்குள்ள குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரையும் படிக்க வைத்தார். இதன் மூலம் ஏராளமான குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தனர். ஆனால், அவர்கள் உயர்கல்விக்கு போகாமல் பாசி, மணி, பலூன் விற்பனைக்கே சென்று வருகின்றனர். இந்நிலையில், ‘‘நாங்கள் படிக்க வில்லை. எங்கள் குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். அதற்கு எங்கள் பகுதியிலேயே ஒரு பள்ளிக்கூடமும், அங்கன்வாடி மையமும் கட்டித்தர வேண்டும்’’ என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து புதன்கிழமை கீரமங்கலம் அறிவொளி நகருக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகம், வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன், வட்டாட்சியர் செந்தில்நாயகி ஆகியோர் வந்து மக்களின் கோரிக்கையை கேட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் அனைத்துக் குழந்தை களும் படிக்க வேண்டும் என்ற அரசின் உத்தர வுப்படி இந்த அறிவொளி நகர் குழந்தை களும் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். ஆனால் சாலையில் சென்று வரும் போது விபத்துகள் ஏற்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குவதாக கூறுகிறார்கள். அதனால் தங்கள் பகுதியிலேயே பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை பரிசீலனை செய்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப இருக்கிறோம் எனஅதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவாதத்திற்கு திருமங்கலம் அறிவொளி நகர் நரிக்குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.