விழுப்புரம், மார்ச் 5- விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன நெற்குணம் ஊராட்சிமன்றத்தில் போடாத பைப்லைனை போட்டதாக கணக்கெழுதி அரசு நிதி கையாடல் செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டேரிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எம்.மணி தலைமை தாங்கினார். சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, மாவட்ட செயலாளர் என் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார் மயிலம் ஒன்றிய செய லாளர் ஜி.ராஜேந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர். மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் சித்தேரியில் கிணறு வெட்டியதில் திட்ட மதிப்பீட்டின்படி செய்யாமல் ஏற்கெனவே இருந்த மண்புழு கொட்டகையை காட்டி ஊராட்சி மன்றத் தலைவர், வட்டார அலுவலர், பொறியாளருடன் இணைந்து மறுபடியும் கொள்ளையடித்துள்ளனர், பஞ்சாயத்துக்கு வாங்கப் பட்ட விளையாட்டு உபகரணங்க ளும், தளவாட சாமான் களை விற்று கையாடல் செய்துள்ளனர். பேவர் பிளாக் சாலை தரமற்ற கற்களை கொண்டு அமைத்தது, மேட்டுத்தெரு மற்றும் பட்டியலின பகுதியில் தரமற்ற பைப்லைன் போட்டதில் அளவு குறைத்து ஊழல் செய்துள்ளனர். சரி செய்யாத கை பம்பு, மினி டேங்க் ஆகியவற்றிற்கு சரி செய்ததாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். பழங்குடியினர் பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறை பல வருடம் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நிதி ரூ5.25 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரி, நீர்ப்பிடிப்பு பகுதியில் கோயில் கட்டி நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி எஸ்.காளிதாஸ், டி.கெஜமூர்த்தி, எம். பழனி, ஆர்.ஏழுமலை, டி. ஆறு முகம் தமிழரசன் டி.சுப்பிரமணி, பி.பாக்கியலட்சுமி உட்பட ஏராள மானோர் கண்டன முழக்கம் எழுப்பியவாறு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் சிபிஎம் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிற மார்ச் 12ஆம் தேதிக்குள் கள ஆய்வு செய்து,மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தற்காலிகமாக காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.