districts

திருச்சி முக்கிய செய்திகள்

அக்.12 அரியலூரில்  தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறைதீர் சிறப்பு அமர்வு

அரியலூர், அக்.7- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார பொதுமக்களுக்காக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அக்.12 அன்று காலை 9 மணிக்கு குறைதீர் சிறப்பு அமர்வு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவிக்கையில், “ஆணைய உறுப்பினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் சிறப்பு அமர்வில் அனைத்துத் துறை தலைமை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த, குறிப்பாக ஆண்டிமடம் வட்டார பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தங்களது பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்சனைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், உடல் ரீதியான தண்டனைக்குள்ளான குழந்தை மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை கோருவது, ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மனுக்களை இந்த குறைதீர் அமர்வில் நேரடியாக அளித்து பயன்பெறலாம்” என்றார்.

மதுக்கூடத்தில் தகராறு: எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை, அக்.7- தனியார் விடுதியில் உள்ள மதுபானக் கூடத்தில், போதையில் தகராறில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளராக உள்ளவர் சுந்தர்ராஜ். இவர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி யில் உள்ள மதுபானக் கூடத்தில் நண்பர்களு டன் மது அருந்தியுள்ளார். அதற்கான பணத்தை  கொடுக்காமல் போதையில் பிரச்சனை செய்துள்ளார்.  இதுகுறித்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா  பாண்டே பரிந்துரையின் பேரில், திருச்சி மண்டல டிஐஜி பகலவன் அவரை பணியிடை  நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டார்.

வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு

பாபநாசம், அக்.7 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்  ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு மத்திய தணிக்கைத் துறை தலைமை கணக்காயர் நெடுஞ்செழியன் பார்வையிட்டார்.  பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் இது வரை நடைபெற்று முடிந்த வளர்ச்சி  திட்டப் பணிகள் மற்றும் நடை பெற்றுக் கொண்டிருக்கிற பணி கள் குறித்து ஆய்வு மேற்கொண் டார். ராஜகிரி ஊராட்சியில் நுண்ணு குடவாசல் அரசு மருத்துவமனையில்  24 மணிநேரமும் மருத்துவர்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?யிர் உரம் தயாரித்தல் மையம், கிராம சேவை மைய கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி  கட்டடப் பணிகளையும் பார்வை யிட்டார். பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார். முதுநிலை தணிக்கையாளர் முரளி, மேற்பார்வையாளர் மனோ கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

திருவாரூர், அக்.7 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி யின் நாட்டு நல பணித்திட்டம் சார்பாக தீபங்குடி கிராமத்தில்  7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு  விழாவில், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் டி.வி.ராமன்  தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவ லர் க.முருகதாஸ் வரவேற்றார். மஞ்சக்குடி சுவாமி தயா னந்தா கல்வி அறக்கட்டளை அறங்காவலரும், பள்ளி தாளாளருமான எம்.ஜி.ஸ்ரீனிவாசன், மாணவர்களின் பணி களை பாராட்டி சிறப்புரையாற்றினார். உதவித் திட்ட அலு வலர் ஆர்.சரவணக்குமார் நன்றி கூறினார். முன்னதாக நடந்த நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியின் போது, வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சள் பை வழங்கப்பட்டன.

குடவாசல் அரசு மருத்துவமனையில்  24 மணிநேரமும் மருத்துவர்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருவாரூர், அக்.7 - குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் குடவாசல் வட்ட பேரவை குடவாசலில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் எஸ்.கற்பகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.பாலசுப்ரமணியன் துவக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் வி.தெட்சிணாமூர்த்தி நிறைவுரையாற்றினார்.  குடவாசல் வட்டத்தின் புதிய தலைவராக எஸ்.கற்பகம், செயலாளராக எஸ்.கோதையம்மாள், பொருளாளராக வி.மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.9,000 வழங்கிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த சமையல் உதவியாளர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். குடவாசல் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசு உதவி பெறும் பள்ளிகளில்  காலை உணவுத் திட்டம் அமலாகுமா? அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அக்.7-  கடலோரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேசில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், தான் ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், மீனவ மக்களின் வாழ் வாதாரம், படிப்பு, முன்னேற்றக் வளர்ச்சி ஆகியவை கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர் களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.  சுமார் 31,000 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும் மதிய உணவு திட்டத்தில் பயன் பெறுவதற் காகவே ஏழ்மையான மக்களின் மாண வர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட கடலோர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லை.  கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதார சில நேரங்களில் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மீன் பிடித்து தொழில் இயற்கை சீற்றம், சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் வருடத்தில் பாதுகாக்கும் கடலுக்கு நீட்டிக்க செல்ல முடியாமல் சூழல் உருவாகிறது.  இதனால் மீனவ குழந்தைகளின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏழ்மையின் காரணமாக மீனவர் குழந்தை கள் தங்களது படிப்பை தொடர முடியாமல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். கட லோர கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகும்.  எனவே, கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த உத்தர விட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், கலைமதி அமர்வில் வெள்ளியன்று விசா ரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என அரசாணை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  மனுதாரர் தரப்பில், தனியார் பள்ளி என்றாலும் அரசு நிதியுதவியில் தான் இயங்குகிறது என வாதிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தர விட்டு வழக்கு விசாரணை வரும் வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆவின் தொழிலாளர்களின் கோரிக்கையை  நிறைவேற்ற கோரி கூட்டுறவு ஊழியர்கள் மனு

மதுரை, அக்.7-  பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க செயலாட்சியர்க ளுக்கான பயிற்சி வகுப்பினை துவக்கி வைப்பதற்காக பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் வளாகத்திற்கு வெள்ளியன்று வருகை தந்தார்.  இந்நிலையில், மதுரை மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மாவட்டத் தலைவர் துரைச் சாமி உள்ளிட்டோர் அமைச் சரை நேரில் சந்தித்தனர்.  அப்போது, மதுரை ஆவின் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை களான 240 நாள் ஈட்டிய விடுப்பு, நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 4 சதவீதம் அக விலைப்படி, ஒப்பந்த தொழி லாளர்களுடைய பிரச்சனை கள், நிலுவையில் உள்ள தர ஊதியம், ஆவின் ஊழியர் சிக்கன நாணய சங்கத்தில் தவறு ஏதும் செய்யாத ஊழி யர்கள் மீதான பழிவாங்கும் நட வடிக்கையை கைவிட கோரு தல் உள்ளிட்ட  கோரிக்கைக ளும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க பரிந்துரைப்ப தாக உறுதி அளித்தார்.