கும்பகோணம், ஜன.20- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பார்க் அருகில் ஜனவரி 19 தியாகி கள் தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் சார்பில் வர்க்க ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு தஞ்சை மாவட்ட பொருளாளர் கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பி னர் சா.ஜீவபாரதி, மாநகர செயலாளர் செந்தில்குமார், விதொச மாநில செயலா ளர் நாகராஜன், விச மாவட்ட துணை செய லாளர் கணேசன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி பொறுப்பாளர் அன்புமணி, மாதர் சங்க அறிவு ராணி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்துகொண்டு வர்க்க ஒற்றுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் திருமெய்ஞானம் தியாகி கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் உள்ளிட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.