அறந்தாங்கி, நவ.24 - ஒன்றிய மோடி அரசை வீழ்த்தவும், 14 அம்சக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும் நவ.26, 27, 28 தேதிகளில் சென் னையில் நாடு தழுவிய பெருந்திரள் அமர்வு போராட் டத்தை நடைபெற உள்ளது. இப்போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை வைத்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஜீவா னந்தம், சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் மாரிக் கண்ணு, சிஐடியு ஒருங்கி ணைப்பாளர் கர்ணா, சிஐ டியு மாணிக்கம், ஏஐடியுசி ராஜேந்திரன், பெரியசாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்க போக்குவரத்து நிர்வா கிகள் உள்ளிட்டோர் பேசினர்.