districts

நவ. 3 ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போராட்டம்

திருச்சி, அக்.20- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநில செயற் குழுக் கூட்டம் ஞாயிறன்று  திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித் தார். துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன், எஸ்டிஎப்ஐ பொதுக் குழு உறுப்பினர் தோ.ஜான்கிறிஸ்து ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு நன்றி கூறினார். கூட்ட முடிவுகளை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் பேசினார். கூட்ட முடிவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதி யத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்க ளின் ஊதிய முரண்பாடுகள் களை யப்பட வேண்டும், ஒன்றிய அரசு அறி வித்துள்ளவாறு 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்ப டைப்பு உரிமை மீண்டும் வழங்கப் பட வேண்டும், பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரி யர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு கல்வித்துறை உடன் ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறை வேற்ற வேண்டும், நடுநிலைப் பள்ளிக ளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் முன் பருவ பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3ல் மாநிலம் முழுதும் மாவட்டத் தலை நகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

;