districts

img

மார்க்சிஸ்ட் கட்சியினரை மிரட்டிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்

மயிலாடுதுறை, பிப்.11- மயிலாடுதுறை அருகே தரமற்ற தார்ச்சாலை போடப்பட்டுள்ளதை கண்டித்து நூதனப் போராட்டம் அறி வித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினருக்கு கொலை மிரட்டல் விடுத்த  ஊராட்சி மன்றத் தலைவரின் கண வர் வீடியோ சமூக வலைதளங்க ளில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மக்களின் அடிப்படை தேவை குறித்து குரல் கொடுப்பதும், பிரச் சனை சார்ந்து பல்வேறு வகை யான போராட்டங்களை முன்னெடுப் பதிலும் அன்றாடம் ஈடுபடுவதால்  அவர்களுக்கு கொலை மிரட்டல்,  தாக்குதலுக்கு ஆளாகுதல் உள்ளிட்ட பல இடையூறுகள் ஏற்படு கின்றன. இருந்தாலும், கட்சியினர் அதை பொருட்படுத்துவதில்லை. தற் போது அதுபோன்ற ஒரு சம்பவம் தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. மயிலாடுதுறை அருகே மாப் படுகை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கடந்த பிப்.8 அன்று பண்ணையார் தெரு  பகுதியில், ஊராட்சி சார்பில் புதிதாக  தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. அந்த தார்ச் சாலை மிகவும் தர மற்று மூன்று மாதங்களுக்குக்கூட தாங்காத அளவிற்கு போடப்பட்டு உள்ளதாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கணேசன் ஆகி யோர் சாலையை வீடியோ பதிவு  செய்தனர். மேலும், அந்த சாலையின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  தரமற்ற முறையில் சாலை போடப் பட்டதை கண்டித்து, தார்ச்சா லையை கூட்டி அள்ளி தலையில் சுமந்து செல்லும் போராட்டம் பிப்ர வரி 21 அன்று நடைபெறும் என அறி வித்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த மாப் படுகை ஊராட்சி மன்றத் தலைவர்  கனிமொழியின் கணவர் ஜெயக் குமார், அப்பகுதி வழியே சென்ற  மேகநாதன் மற்றும் டி.கணேசனி டம், “நீங்கள் எப்படி வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதி விட்டீர்கள்? இதுகுறித்து என்னிடம் தான் பேசியிருக்க வேண்டும்” என  கடுமையாக பேசி மிரட்டல் விடுத்து உள்ளார். மேலும் இவர் மிரட்டல்  விடுக்கும் காட்சியை வீடியோ எடுத்த வரையும் தாக்க முற்பட்டுள்ளார். தற்போது அந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். இதனிடையே மிரட்டலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சி.மேகநாதன் மயிலாடுதுறை காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.