நெய்வேலி, ஆக.4-
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது.
தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப் படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது சுரங்கம் விரிவாக்கம் செய்து நிலக்கரி வெட்டி எடுக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங்கம்-2-இல் இருந்து 60 மீட்டர் தூரத்தில் உள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மழைக்காலங்களில் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறு அமைப்பது அவசியம் என்ப தால், நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கிலோ மீட்டர் தூரம் மட்டும் வளையமாதேவி, கத்தாழை, கரி வெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த விளை நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி என்.எல்.சி. நிர்வாகம் மிகப்பெரிய இயந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கி யது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், இரவு-பகலாக கால்வாய் வெட்டும் பணியை 8-வது நாளாக செய்து வருகிறது.