கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், அதிநவீன வீடியோ வாகனம் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ துவக்கி வைத்து பார்வையிட்டார். பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.