திருச்சிராப்பள்ளி, ஜன.14- திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செய்தி மக்கள் துறை சார்பில் நடத்தப்படும் அரசுப்பொருட் காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, சுவாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் வர வேற்றார். இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 7 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தமிழ் நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 11 பேருக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை, மாற்றுத் திற னாளிகளுக்கு ரூ.1.21 லட்சம் மதிப்பில் உதவி உபகர ணங்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் சார்பில் பல்வேறு வேளாண் உபகரணங்கள், கூட்டுறவுத்துறையின் சார்பில் 24 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.77 லட்சம் மதிப்பிலான கடனு தவி தள்ளுபடிக்கான ஆணை உட்பட 96 பயனாளி களுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உத விகளை அமைச்சர்கள் வழங் கினர். தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் அரசுப் பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணிவரை நடை பெறும்.