districts

img

வேலூச்சாமிபுரம் பகுதியில் புதிய ஜவுளிப் பூங்கா

கரூர், செப். 20-  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமையில், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில், கைத்தறித்துறையின் சார்பாக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக நிறுவப்பட்ட மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரத்தையும், ஜவுளித்துறையின் சார்பாக கோடங்கிப்பட்டியில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜவுளிப் பூங்காவினையும் திறந்து வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு செயலாளர் வி.அமுதவல்லி, துணிநூல் துறை இயக்குநர் லலிதா ராஜேந்திரன்,  கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.