பாபநாசம், பிப்.8- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டார வாடை - தேவராயன் பேட்டை சாலை ஒரு கிலோ மீட்டருக்கு மேல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர் என்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் புதியசாலை போடப்பட்டது. இதற்காக தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்தனர்.