விருதுநகர், ஜூன் 29-
தமிழகஅரசு, தேர்தல்கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் விருது நகர் மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
விருதுநகரில் ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் திருவண்ணா மலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். இராமசுப்புராஜ், ஜெகதீசன் ஆகியோர் பேசினர்.
முடிவில், தமிழக அரசின் தேர்தல்கால வாக்குறு திப்படி 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ச த்துணவு, அங்கன்வாடி. ஊராட்சி எழுத்தர், வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கிட வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் விரைவில் செலவுத் தொகை வழங்கிடக் கோரி வரும் ஜூலை 18இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்து வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.