districts

img

கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.3 கோடியில் புதிய கட்டடங்கள்

புதுக்கோட்டை, நவ.18 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துவமனைக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் புதன்கிழமை ஆய்வு மேற் கொண்டார். அப்போது  மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை  வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.  தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது: கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு  வரை கறம்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார  நிலையமாக இருந்தது வட்டார மருத்துவ மனையாக அறிவிக்கப்பட்டது. எந்தவித  மருத்துவ பணியிடங்களையும் உருவாக் காமல் வெறும் பெயர் பலகை மட்டும் மாற்றி விட்டு தரம் உயர்த்தப்பட்டதாக அப்போ தைய ஆட்சியில் அறிவித்துவிட்டனர். அத னால், வட்டார மருத்துவமனையாக அறி விக்கப்பட்டாலும் தரம் உயர்த்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்என்ற நிலையிலேயே இருந்து வந்தது.  வட்டார மருத்துவமனைக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து  தருவதற்காக இந்த ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. கூடுதல் படுக்கை வசதி யுடன் உள்ள கட்டடங்கள், பிணவறை, கூடுதல் மருத்துவர்கள் கேட்டு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல் லாவின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூபாய் இரண்டு கோடியும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்  ஒரு கோடியும் தருவதாக இருவரும் உறுதி  அளித்துள்ளனர். அதன்படி ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் அமைத்து தரப்படும். ஓரிரு மாதங்களில் பிணவறைக்கான கட்டடம் அமைக்கப்படும்.  மேலும், அடுத்த நிதிநிலை அறிக்கை யில் மருத்துவர்கள் தங்குமிடம் கட்டித்  தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும். புதிய மருத்துவப் பணியிடங்கள்  நான்கு மாத காலங்களில் உருவாக்கப்படும்.  அதுவரை, வேறு மருத்துவமனையிலிருந்து கூடுதலாக இரண்டு மருத்துவர்கள் இங்கு பணிக்கு வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சருடன் மாநிலங்களவை உறுப்பி னர் எம்.எம்.அப்துல்லா, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன், ஒன்றியக் குழு தலைவர்  ரா.மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.