districts

தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் ‘சஸ்பெண்டு

திருநெல்வேலி ,டிச. 20- நெல்லை சாப்டர் பள்ளியில் கழிவறை தடுப்புசுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்ப வம் தொடர்பாக தலைமை ஆசி ரியை உள்பட 4 ஆசிரியர்கள் ‘சஸ் பெண்டு’ செய்யப்படுவதாக அறி விக்கப்பட்டு உள்ளது.  நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி கழிவறை தடுப்புசுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி யானார்கள். 2 மாணவர்களுக்கு பலத்த காயமும், 4 மாணவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.இந்த  சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளை யும் ஆய்வு செய்து, மோசமான கட்டி டங்களை இடிக்க அரசு உத்தர விட்டது.இந்த நிலையில் சாப்டர் பள்ளியில் நடந்த விபத்து தொடர்பாக  டயோசீசன் நிர்வாகம் சார்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதில்  டயோசீசன் பி‌ஷப் பர்னபாஸ் பலி யான மாணவர்கள் குடும்பத்தின ருக்கு தலா ரூ.3 லட்சமும், காயம்  அடைந்த மாணவர்கள் குடும்பத்தி ற்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார். மேலும் டயோசீசன் சார்பாக மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் விசாரணை நடத்தினார். விபத்து நடந்த போது சில ஆசிரியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடாமல் வேடிக்கை பார்த்ததாக மாணவர்கள் புகார் கூறி இருந்தனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞானசெல்வி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள்டைட்டஸ், சுதாகர் என 4 ஆசிரியர்கள் ‘சஸ்பெண்டு’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான உத்தரவு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு திங்கட்கிழமை  கல்வித்துறை அதி காரிகள் அதிகாரப்பூர்வமாக அறி விப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளா ளர் செல்வக்குமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்தக்காரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரை ஏற்கனவே  கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி  வருகிறார்கள்.