திருச்சிராப்பள்ளி, பிப்.6 - வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலா ளர்களுக்கு மீண்டும் வழங்கக் கோரி முற்று கைப் போராட்டம் நடைபெற்றது. ஊதிய பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ள போது தொழிலாளர்கள் சட்டவிரோத மாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையையும், தொழிலாளர் துறை யையும் மதிக்காமல் அத்துமீறி சிஐடியு தொழிற்சங்க அலுவலக பூட்டை உடைத்து, ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கண்டித்தும், தொழிலாளர் இணை ஆணையரின் உத்தரவை உடனே அமல்படுத்த வலியுறுத்தியும் சிஐடியு திருச்சி மாவட்ட அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மேலப்புலிவார் ரோடு நாகப்பா கார்ப்பரேசன் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் சிவக்குமார் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மந்தை சங்க தலைவர் குமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், இங்கிலீஷ் காய்கறி சங்க தலைவர் சின்னதுரை ஆகியோர் பேசினர். பின்னர் போலீசாருடன் நடந்த பேச்சு வார்த்தையில், ஆர்டிஓ தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடி வானது. இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.