districts

தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் தலித் மக்கள் மீது தாக்குதல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-

    திருச்சிராப்பள்ளி மாவட் டம், தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரத்தில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் திருவிழாவில் புதன் கிழமை நடைபெற்ற கல்  வீச்சு நடந்ததாகவும் இது தொ டர்பாக இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த தனித் தனி புகார்களின் அடிப்ப டையில் இரண்டு வழக்கு களைப் பதிவு செய்துள்ள தாக காவல்துறை தரப்பு தெரி விக்கிறது.

    கல்வீச்சு சம்பவத்தில் இடைநிலை சாதி மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15  பேரை தொட்டியம் காவல் துறையினர் கைது செய்துள் ளனர். இந்த மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர்.  

    கோவில் திருவிழா வின் போது இரு சமூகத் தினரிடையே ஏற்பட்ட தக ராறு காரணமாக கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவ தாகக் காவல்துறை வட்டா ரங்கள் தெரிவித்தன.

   மேலும் தலித் சமூகத் தைச் சேர்ந்த ஆர். ராஜவேல்  அளித்த புகாரின் பேரில்  இடைநிலை சாதியைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட் டோர் மீது 147 (கலவரம்) மற்றும் 148 (கலவரம், பயங்கர ஆயுதம் மூலம் தாக்குதல்) உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் எட்டுப் பேர் கைது செய் யப்பட்டனர்.  

  இடைநிலை சாதியைச் சேர்ந்த வி.விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த  ஒன்பது பேர் மீது காவல் துறையினர்  வழக்குப் பதிவு  செய்து, ஏழு பேரை கைது  செய்தனர் எனவும் தெரிவிக் கின்றன.