districts

கும்பகோணத்தில் இருந்து மார்ச் 7 முதல் வியாழன்தோறும் நவக்கிரக சிறப்பு பேருந்து இயக்கம்

அமைச்சர் சிவசங்கர் தகவல் கும்பகோணம், பிப்.27-  கும்பகோணத்தில் இருந்து மார்ச்  7 முதல் ஒவ்வொரு வியாழக்கிழமை களிலும் நவக்கிரக கோயில்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப் படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் தெரி விக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் சார்பில் நவக்கிரக  கோயில்களுக்கு சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா  பேருந்து இயக்கப்படுகிறது. இப் பேருந்து கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோ ணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணித்து திரும்பும் வகையில், பிப்.24 முதல் இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட்ட இந்த சிறப்பு  சுற்றுலா பேருந்து, மார்ச் 7 அன்று  முதல் ஒவ்வொரு வியாழக்கிழமை களிலும் இயக்கப்படும். இதற்கு பயணக் கட்டணமாக நபர்  ஒன்றுக்கு ரூ.750 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, நவக்கிரக சிறப்பு பேருந்தானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 5 மணிக்கு கும்ப கோணம் பேருந்து நிலையத்தில் புறப் பட்டு, நவக்கிரக கோயில்களுக்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலை யத்தை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது. மூன்று நாட்களுக்கு இயக்கப் படும் இந்த நவக்கிரக சிறப்பு பேருந் தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள வர்கள், www.tnstc.in இணைய தள முகவரியில் முன்பதிவு செய்து  தங்களது பயணச்சீட்டை பெற்றுக்  கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள் ளன. கைப்பேசி செயலி மூலமாகவும்  முன்பதிவு செய்யலாம். பயணிகள் நவக்கிரக சுற்றுலா  பேருந்து வசதியினை, இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இய லும். நேரடியாக பேருந்தில் பயணச்  சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது” என்றார்.