மயிலாடுதுறை, பிப்.16- தென்னக பண்பாட்டு மையம், ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வ ரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் துவங்கியது. துவக்க விழாவிற்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் இந்து சமய அற நிலையத்துறையின் உயர்நிலை ஆலோ சனைக் குழு உறுப்பினருமான முனைவர்.மதிவாணன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மூத்த பரத கலைஞர் பத்மஸ்ரீ லீலா சாம்சன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கௌரவ தலைவர் விஸ்வநாதன், தலைவர் பரணிதரன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். முதல் நாள் விழாவில், மூத்த பரத கலைஞர் பத்மஸ்ரீ லீலா சாம்சன் கலைப் பணிகளை பாராட்டி ‘‘மணிமேகலை பொற்சதங்கை’’ விருதும், பரதநாட்டிய கலைஞர் ராம கௌதன்யாவுக்கு ‘‘இளம் மயூர நர்த்தன இளவரசு’’ விருதும், வளரும் நாட்டிய கலைஞர் அதிதிக்கு ‘‘இளம் மயூர நாட்டியதாரகை’’ விருதும் வழங்கப் பட்டது. இதே போல, நாதஸ்வர கலைஞர்கள் கிருஷ்ணகுமார், கார்த்திக் ஆகியோருக்கு ‘‘மயூர நாதஸ்வர இளவல்’’ விருதும், தவில் இசை கலைஞர்கள் செல்வம் மற்றும் சுமன் ஆகியோருக்கு ‘‘மயூர தவி லிசை இளவரசு’’ விருதும் சப்தஸ் வரங்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கப் பட்டது. புதன்கிழமை தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகம் மட்டு மின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்க ளிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலை ஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு விதமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.