districts

திருச்சி முக்கிய செய்திகள்

நாட்டு நலப்பணித்  திட்ட முகாம் நிறைவு

மயிலாடுதுறை, அக்.27 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புனித தெரசா  பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணிதிட்டம் சிறப்பு முகாம் ஏழு நாட்கள் நடைபெற்ற நிலையில் வெள்ளி யன்று நிறைவடைந்தது. 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் முகாமில் பங்கேற்றனர். துப்புரவு பணிகள், மருத்துவ பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கு புனித தெரசா பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி முனைவர் மெர்சி தங்கம், தலைமை யாசிரியை அருட்சகோதரி சிசிலி ஆகியோர் தலைமை வகித்தார். அருட்சகோதரி லில்லி, மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். முன்னதாக தரங்கம்பாடி போர்ட் சென்டனியல் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மரக்கன்றுகளை வழங்கினர்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி

அறந்தாங்கி, அக்.27 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் சமூக அறி வியல் பாடத்திற்கான பயிற்சியை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார்.  பயிற்சியில் சமூக அறிவியல் பாடத்தில் மதிப்பீடுகளின் நோக்கம், தேசிய அடைவு ஆய்வு அடிப்படையிலான மதிப்பீடு கள், பாடநூல் வினாக்களுக்கும் தேசிய அடைவு ஆய்வு வினாக் களுக்கும் உள்ள வேறுபாடுகள், புளூமின் வகை பிரித்தல்  மற்றும் திறன் அடிப்படையிலான கேள்விகளை உருவாக்கு தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி யின் கருத்தாளர்களாக ரூத் பிரின்சஸ், அறிவொளி மற்றும்  சண்முகநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.

மருத்துவ மதிப்பீட்டு முகாம்

பாபநாசம், அக்.27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்  பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு  முகாம் நடந்தது. முகாமில் 18 வயதிற்குட்பட்ட 70 பேருக்கும்,  18 வயதிற்கு மேற்பட்ட 60 பேருக்கும் மருத்துவர்கள் பரிசோ தனை மேற்கொண்டனர். இதில் இயன்முறை தசைப் பயிற்சி யாளர் முருகேஸ்வரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) முருகன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அடை யாள அட்டை, வீல் சேர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

போராடிப் பெற்ற  பேச்சுவார்த்தை ஒப்பந்த நகல்

மன்னார்குடி, அக்.27 - ஊதியத்திற்கான தேதி நிர்ணயம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேர்ப்பு, பண்டிகை முன்பணம்,  போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மன்னார்குடி நகராட்சி தனியார் ஒப்பந்த  துப்புரவுப் பணியாளர்கள் (சிஐடியு) சார்பாக சாலை மறியல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மன்னார்குடி நகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டது. அதன்படி ரூ.1000 போனஸ், தீபாவளி முன் பணம் ரூ.5000, மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டன. ஒப்பந்த  நகல் பின்னர் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்படவில்லை.   உடனடியாக ஒப்பந்த நகல் கொடுக்க வேண்டுமென கோரி 26.10.2023 அன்று மாலை, சங்கத்தின்  மதிப்புறு தலை வர் கே.சிவசுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி அலுவல கத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்  முடிவில், அன்று இரவு ஒப்பந்த நகல் வழங்கப்பட்டது.  இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்  ஜி.ரகுபதி, சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள், துப்புரவுத் தொழிலாளர் சங்க கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, அக்.27 - பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசை  கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மஜக மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமை வகித்தார். மனித உரிமைகள் பாது காப்பு அணி மாநிலச் செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாநில துணை பொது செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்த், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.


மணல் மாட்டுவண்டி தொழிலாளி பொய் வழக்கில் கைது: சிஐடியு கண்டனம்

கரூர், அக்.27 - மணல் மாட்டுவண்டி தொழிலாளி மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்ததை கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணல்  மாட்டுவண்டி தொழிலா ளர்கள் சங்க கரூர் மாவட்டத்  தலைவர் எம் . சுப்பிர மணியன் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் செயல்படும் இரண்டு மணல்  குவாரிகள் மூலம் லாரிகளுக் கும், மணல் மாட்டுவண்டி களுக்கும், மணல் விநி யோக மையம் மூலம் அரசு  தனித்தனியாக மணல்  விநியோகம் செய்து வரு கிறது. நூற்றுக்கணக்கான லாரிகளுக்கும், மணல் மாட்டு வண்டிகளுக்கும் முன்பதிவு மூலம் தினந்தோ றும் மணல் விநியோகம் நடைபெற்று வருகிறது.  கரூரில் 1500-க்கும்  மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் இருந்தும், ஒரு நாளைக்கு  200 முதல் 300 மாட்டு வண்டிகளுக்கு மட்டும் மணல் கிடைக்கிறது. அது வும் அரசு அனுப்பும் குறுஞ்செய்தி கிடைத்த பிறகுதான், மணல் விநி யோக மையத்திற்கு சென்று மணலை பெற முடியும். அப்படி இருக்கும்போது, மணல் உபயோகிப்பவரின் தேவைக்கேற்ப மணலை பெற முடியாது என்ற நிலை யில், மாட்டுவண்டி தொழி லாளர்கள் பெரும்பாலும் மணலை ஓரிரு தினங்கள் இருப்பு வைத்து, மணல் தேவைப்படுபவருக்கு விநி யோகம் செய்கின்றனர். அவ்வாறு அரசு மணல்  குவாரியில் பெற்ற மணலை  விநியோகத்திற்கு எடுத்துச்  செல்லும் போது பசுபதி பாளையம் காவல்துறை மாட்டுவண்டியை வழி மறித்து, மணல் எடுத்து  வந்த மணல் மாட்டுவண்டி  தொழிலாளி பிரகாஷிடம்  விசாரணை நடத்தியுள்ள னர். அப்போது அவர் மணல் எடுத்து வந்ததற் கான உரிமை சீட்டை  போலீசாரிடம் காட்டியுள் ளார். ஆனாலும், உரிமை சீட்டில் சம்பந்தப்பட்ட தேதி யில் இல்லை எனக் கூறி, சனப்பிரட்டி அமராவதி ஆற்றில் மணலை திருடிய தாக பொய் வழக்குப் போட் டுள்ளனர் போலீசார். மேலும் இதனை சம்பந்தப் பட்ட மாட்டுவண்டி தொழி லாளியே ஒத்துக் கொண்ட தாகவும் புகாரை பதிவு செய்து, பசுபதிபாளையம் போலீசார் பிரகாஷை சிறை யில் அடைத்துள்ளனர். மாட்டுவண்டி தொழி லாளி மீது பொய்யான புகாரை பதிந்து அவரை  கைது செய்து சிறையில்  அடைத்துள்ள பசுபதிபாளை யம் காவல்துறையினரின் நடவடிக்கையை மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண் டிக்கிறது. அவர் மீது போட்ட பொய் வழக்கை ரத்து செய்ய  வேண்டுமென, மாவட்ட  காவல்துறையையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கிகளில் 257 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி: 2 பேர் கைது

தஞ்சாவூர், அக்.27- தஞ்சாவூரில் இரு வங்கிகளில் 257 பவுன்  போலி நகைகளை அடமானம் வைத்து, சுமார் ரூ.69 லட்சம் மோசடி செய்த 2 பேரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்த னர். தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ் ராவத்திடம், தமிழ்நாடு கிராம  வங்கியின் அம்மாபேட்டை கிளை மேலாளர் காந்திமதிநாதன் சில மாதங்களுக்கு முன்பு புகார் செய்தார். அதில், “அம்மாபேட்டை அருகே அருந்தவபுரம் திருக்கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ரமேஷ் (54) தனது பெயரிலும், தன் மனைவி பவானி, பவானியின் தாய் லட்சுமி பெயரிலும் 2022  மார்ச் 1 அன்று முதல் செப்.30 வரை 19 தவணை களாக தங்க முலாம் பூசப்பட்ட 172.25 பவுன்  போலி (கில்ட்) நகைகளை அடகு வைத்து ரூ.44.65 லட்சம் பெற்று வங்கியை ஏமாற்றி யுள்ளார்” என தெரிவித்துள்ளார். இதேபோல, அருந்தவபுரம் பெடரல் வங்கிக் கிளை மேலாளர் விசாலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சில மாதங்க ளுக்கு முன்பு அளித்த புகாரில், “ரமேஷ் என்ப வர் தனது பெயர் மற்றும் மனைவி பெயர், தன்னிடம் வயல் வேலை பார்க்கும் அபூர்வம்  பெயரில் 2022 மார்ச் 1 அன்று முதல் செப்.30  வரை 8 தவணைகளாக தங்க முலாம் பூசப்பட்ட 85.16 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூ.24.34 லட்சம் பெற்று, வங்கியை ஏமாற்றியுள்ளார்” என தெரி வித்துள்ளார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டக் குற்றப் பிரிவு  காவல் ஆய்வாளர் ராமதாஸ் நிகழாண்டு செப்.28 அன்று வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக தலை மறைவாக இருந்து வந்த ரமேஷ், இதற்கு மூளையாகச் செயல்பட்ட மன்னார்குடி அருகே அசேஷம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த  எம்.முருகையனை (49) காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். இவர்களில் முருகையன் கும்பகோணம், சிதம்பரம் பகுதிகளில் பல்வேறு நபர்கள் மூலம் போலி நகைகளை தனியார் அடகு கடை, வங்கிகளில் அடமானம் வைத்து, மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இது  தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையிலிருந்து இளைஞர்களை மீட்போம்! நவ.7 கரூரில் சிபிஎம் பொதுக்கூட்டம்

கரூர், அக்.27 - போதையிலிருந்து இளைஞர்களை மீட்க நவம்பர் 7 அன்று கரூரில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் சுங்ககேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு மாநிலக் குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.நாகராஜன், அவரது மகன் விக்னேஸ்வர் ஆகியோர் மீது  6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. சம்பவம் நடந்த அன்று 2 பேரை மட்டும் மாயனூர் போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என கோரி கட்சியின் சார்பில் குளித்தலை டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதன் பின்பு, மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கத்தில், மீதமுள்ள 2 பேரை மாயனூர் போலீசார் கைது செய்யாமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், இந்த வழக்கில் அலட்சியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மீதமுள்ள 2 பேரையும் கைது செய்ய வேண்டும். தற்போது போடப்பட்டுள்ள வழக்கை மாற்றி, பிணையில் வர முடியாத வகையில் (இந்திய தண்டனை சட்டம் 307) கொலை முயற்சி வழக்காக பதிவு செய்ய வேண்டும்.  கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் உபயோகம், சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகளவில் இருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பிச்சம்பட்டி பகுதியில் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும்.  போதைக்கு எதிராகவும், போதையில் இருந்து இளைஞர்களை மீட்கவும், பாதுகாத்திடவும் நவம்பர் 7 அன்று கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு  அமைக்க அனுமதி அளிக்கவில்லை குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

அரியலூர், அக்.27- அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்க ளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க  சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, ஓஎன்ஜிசி நிறு வனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்ச கத்திடம் கடந்த ஜீன் மாதம் விண்ணப்பித்து இருந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் காட்டகரம், குறுங்குடி, குண்டவெளி, முத்து சேர்வாமடம் உள்ளிட்ட 10 இடங்களில் எண்ணெய் உற்பத்தி கிணறுகள் அமைய  உள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, அதன் விபரங்களை தெரிவிக்க வேண்டுமென கடந்த ஜூன் 30  அன்று, சுற்றுச்சூழல் அமைச்சகம் ஓஎன்ஜிசி  நிறுவனத்திற்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தது.  ஓஎன்ஜிசி எரிவாயு அமைக்க விவசாயி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராள மான விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று  ஓஎன்ஜிசி குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா குறுக்கிட்டு, “ஓஎன்ஜிசி நிறு வனம் எரிவாயு அமைப்பது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த முடிவையும் மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ எடுக்காது” என உறுதியாக தெரிவித்தார்.