மயிலாடுதுறை, பிப்.2- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தேசிய வாக்காளர் தினத் தையொட்டி நடைபெற்ற தேசிய வாக்கா ளர் சுவர் இதழ் போட்டியில் மாநில அளவில் மூன்றாவது பரிசு பெற்றுள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை யொட்டி மாநிலம் முழுவதும் வட்ட அளவி லான ஓவியப்போட்டிகள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் அன்மை யில் நடைபெற்றது. தரங்கம்பாடி வட்ட அளவில் நடை பெற்ற போட்டியில் புனித தெரசா பள்ளி யில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி பூஜா மணிபாலன் பங்கேற்றார். இவர் வரைந்த ஓவியத்திற்கு மாநில அளவில் 3-ஆவது பரிசு கிடைத்தது. இந்நிலையில், ஜனவரி 25 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவி பூஜா மணிபாலனுக்கு சான்றிதழ், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். மாநில அளவில் பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி மெர்ஸி தங்கம், அருட்சகோதரி செசிலி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர் கள், பெற்றோர்கள் பாராட்டினர்.